Thursday, February 14, 2013

அவள் பிரிவு

சாமிநாத சர்மா தன் மனைவியைப் பற்றி எழுதிய கடிதங்களின் தொகுப்பு, அவள் பிரிவு என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தை சென்ற ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியின் வெளியே உள்ள பிளாட்பாரக் கடையொன்றில் வாங்கினேன். பத்து ரூபாய். சாமிநாத சர்மா, நாடுகள், தலைவர்களைப் பற்றியெல்லாம் விரிவாக நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார். இந்நூல் அவருடைய மனைவியைப் பற்றியது. அவருடைய சுயசரிதத்தின் ஒருபாகமாக இருக்கும் என்றெண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், இது வேறொரு திசைக்குக் கூட்டிச் சென்றுவிட்டது. பல இடங்களில் துக்கத்தையும் மலைப்பையும் ஏற்படுத்தி சாமிநாத சர்மாவின் மனைவிமீது பெரிய அளவில் மரியாதையை ஏற்படுத்திவிட்டது. அந்தக் காலப் பெண்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்று, அவள் பிரிவு.

புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், என் வாழ்வில் மறக்கவேமுடியாத ஒரு புத்தகத்தை வெறும் பத்து ரூபாய்க்கா நான் வாங்கியிருக்கவேண்டும் என்று மனசு உறுத்தியது.

இந்நூல் தொடர்பாக எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவு.

http://www.sramakrishnan.com/?p=3232