Thursday, February 14, 2013

கவி

பாரதியின் பிறந்த நாளன்று, கவிக்கு (வயது 2) 'ஓடிவிளையாடு பாப்பா’ பாடலை அறிமுகப்படுத்தினேன். 'ஓய்ந்திருக்கலாகாது’ என்கிற வார்த்தையெல்லாம் அழகாகத் தடம்புரண்டாலும், பாப்பா...என்று ஒவ்வொரு வரியும் முடிவது கவிக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தோஷமாகச் சொல்லிப் பழகினாள். அடுத்த டிசம்பர் 11க்குள், கவி, குறைந்தது 10 பாரதி பாடல்களையாவது பாடப்பழகவேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.