Tuesday, January 10, 2012

காவல் கோட்டம் - கொலைவெறி ஹிட்!



2012 சென்னை புத்தகக் காட்சியின் ராக்ஸ்டார், சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்தான்.

சென்ற வருடம், சாகித்ய அகாடமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க, 2011 புத்தகக்காட்சியில் 3000 காப்பிகள் விற்றதாகச் சொல்லப்பட்டது. (ஆனால், தினத்தந்தி, தினமணியின் டாப் 5-யில் இதற்கு இடம் கிடைக்கவில்லை). இந்த வருட வசூல் மழை, காவல் கோட்டத்துக்கு.

சாகித்ய அகாடமி விருது, சென்னை புத்தகக்காட்சி போன்றவற்றுக்கு முன்பே காவல் கோட்டம், 3000 காப்பிகள் விற்றுத்தீர்ந்துவிட்டது. எனவே, விருது ஆரவாரத்துக்கு முன்பே புத்தகம் ஹிட்டுதான்.

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் ஒரே அமளிதுமளிதான். உடனேயே, மதுரையிலிருந்து 1500 ஆர்டர்கள் குவிந்திருக்கின்றன. புத்தகக்காட்சியில் கேட்கவே வேண்டாம். காவல் கோட்டத்தைக் கையிலேயே பிடிக்கமுடியவில்லை. நம்பமுடியாத அளவுக்கு, தினமும் 300 லிருந்து 400 காப்பிகள் வரை விற்றுக்கொண்டிருக்கிறது. புத்தகத்தின் விலை, ரூ. 650 என்பதை மறந்துவிடவேண்டாம். இதே ரீதியில் சென்றால், இந்த வருடம் 10,000 காப்பிகள் விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த வருட புத்தகக்காட்சியில், பலத்தப் போட்டி, பொன்னியின் செல்வனுக்கும் காவல் கோட்டத்துக்கும்தான்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/search.php?mode=search&page=1&keep_https=yes